11/12/2012


புகை பழக்கம்

Post image for புகை பழக்கம்
ஆண்டு தோறும் (மே-31) உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையை பயன்படுத்துவது நாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலானோரை அது ஆட்கொண்டுள்ளது. நவநாகரீக பெண்களையும் இப்பழக்கம் சுற்றி வளைத்துள்ளது. இந்த புகையிலை நாகரீக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர் கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்து வருகிறது.
ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக சிகரெட்டாக, பான்பராக்காக, குட்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும்.
புகை பிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டு தோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது.அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர். மேலும் இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரையீரல் புற்று நோயினாலும் ஆண்டு தோறும் மடிகின்றனர். புகையிலை பொருட்களில் சிகரெட் முதலிடத்தை வகிக்கிறது.* சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43 வேதிப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.
* உலக அளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகைப்பிடிப்பதால் மரணத்தை தழுவுகிறார்.
* ஆண்டிற்கு 60 லட்சம் பேர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளால் உயிரை துறக்கின்றனர்.
* 2030-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
* வளரும் நாடுகளை சார்ந்தோர் 70 சதவீதம் பேர் இதில் அடங்குவர்.
* 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு பொருளை உட் கொண்டு வெளியிடுகிறார். இவரால் மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
* பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உள்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுபவை.
* புகை பழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகை பிடிப் போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம்.
* இது இருதய துடிப்பை யும், ரத்த கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும், சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக் குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
* சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக்குழாய், உணவுக்குழாய், சிறுநீரக பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்று நோயை ஏற்படுத்தும்.
* நுரையீரல் நோய், புற்று நோய் ஏற்பட காரணம் புகை பிடிப்பதே.
* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி. என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம்.
* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.
* புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்ற வற்றை வாங்க தினமும் குறைந்தது 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.
இத்தகைய தீங்களிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அவர் மற்றவருக்கு தீங்கை நாடுவதால் அவர் சிறந்த முஸ்லிமாக ஆகமாட்டார்.
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்.[நூல்;புஹாரி]
மேலும் ஒரு முஸ்லிம் எல்லாவகையிலும் நன்மையான விஷயங்களில் பிறருக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். தீமையான விஷயத்தில் முன்னுதாரணமாக திகழக்கூடாது. புகைபிடிப்பவர்கள் தன்னுடைய வீட்டில் சர்வ சாதாரணமாக புகைப்பதால், இவரை பார்த்து இவரது பிள்ளைகளுக்கும் இந்த பழக்கம் தொற்றிக்கொள்கிறது. அதுபோல் இவரது நண்பர்கள் உறவினர்கள் சிலரும் புகைப்பதற்கு இவர் காரணியாக அமைந்துவிடுவார். ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும். தீமைக்கு வழிகாட்டினால் உலகம் அழியும்வரை இவர் காட்டிய தீமையை யாரெல்லாம் செய்கிறார்களோ அதிலிருந்து ஒரு பங்கு இவருக்கு கிடைக்கும்.
பொருளாதார வீண் விரயங்கள்;
புகைப்பிடிக்கும் ஒருவர் தான் இந்த பாழாய்ப்போன புகைக்கு செலவிட்டதை ஒரு ஆண்டு சேமித்து வைத்து பார்ப்பாரானால், அவரே பிரமிக்கும் அளவுக்கு ஒரு தொகை விரயமானதை உணர்வார். இத்தகைய வீண் விரயங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்; [மறுமையில்] அடியானின் பாதம் நகராது நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை;
அதில் ஒன்றுதான் , எந்தவழியில் சம்பாதித்தாய்; எந்தவழியில் செலவழித்தாய்..? [திர்மிதி]நாளை மறுமையில் அல்லாஹ் மேற்கண்ட கேள்வியை கேட்கும்போது, நாம் செலவு செய்த பட்டியலில் சிகரெட் மற்றும் புகையிலைக்காக அளித்த காசும் வருமே! அதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? சிகரட் பிடிப்பது மார்க்கத்தில் ஆகுமானது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? அல்லது சிகரெட் பிடிப்பது உடம்புக்கு நல்லது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? இந்த வீண் விரையத்திற்காக இறைவன் தரும் தண்டனையை தாங்க முடியுமா?
சிந்திக்க வேண்டும்.புகை பிடிப்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்;
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)சிகரெட்டுக்காக செலவழிக்கும் பணத்தை ஒரு ஆண்டு நீங்கள் சேமித்தால் எத்துனை ஆயிரங்களை விரயமாக்கியிருக்கிறோம் என்று கணக்கிடமுடியும். ஒரு பாக்கெட் சிகரெட்டுக்காக செலவிடும் காசை ஒரு ஏழைக்கு தர்மம் செய்தால் உங்கள் செல்வமும் பெருகும். மறுமையில் நன்மையும் கிடைக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவன் நமக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளான். காசையும் கொடுத்து கெடுதியை வாங்குவதுதான் பகுத்தறிவா என்று சிந்திக்க வேண்டும்.


முகவை அப்பாஸ்

11/05/2012

அன்பான நண்பர்கள் அனைவருக்கும் அதிரைதாஜ் ஜின் அஸ்ஸலாமு அழைக்கும் இணையதில் கண்டதை என் தளத்தில் பகிர்கிறேன் 

கணினி பிரச்சனைகளுக்கு இலவச தீர்வு Microsoft தளத்தில்

நமது கணினியில் உள்ள இயங்குதளத்தில் அவ்வப்பொழுது ஏதாவது பிரச்சனைகள் வருவது வாடிக்கைதான். கணினி திடீரென வேகம் குறைவது, தொங்குவது (அதாங்க Hang ஆவறது), ஆடியோ வராமலிருப்பது, மை கம்ப்யூட்டரில் ட்ரைவ்கள் காணாமல் போவது, எழுத்துருக்களை நிறுவமுடியாமல் போவது, இணைய உலாவி (Internet Explorer) இல் பிரச்சனை (கொடுக்கும் வலை முகவரி வேறு, திறக்கும் பக்கம் வேறு) என பல பிரச்சனைகள் வருவதுண்டு.

                                                        

இது போன்ற பிரச்சனைகளை இனம் கண்டு கொள்வதற்கும், தீர்வு காண்பதற்கும் நிறைய அனுபவம் தேவைப்படுகிறது. ஒரு சராசரி கணினி பயனாளரால் இவற்றை சரி செய்ய இயலுமா? இயலும் என்கிறது Microsoft Fix it Center. மைக்ரோசாப்ட் நிறுவனம் பல வருடங்களாக சிறு சிறு பிரச்சனைகளுக்கு Fix it script களை தனது தளத்தில் வெளியிட்டு வந்தது. தற்பொழுது இவையனைத்தையும் உள்ளடக்கிய Microsoft Fix it Center (Beta) மென்பொருள் கருவியை வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம் என்பது சிறப்பான விஷயம். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 



இந்த மென்பொருள் Windows XP, Vista & Windows 7 ஆகிய மூன்றிலும் பயன்படும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. 


இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, ஒரு சில அத்தியாவசியமான கருவிகளை அதுவாகவே தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளும். 

விண்டோஸ் எக்ஸ்பியில் .NET 2.0 நிறுவப் படாமல் இருந்தால் கீழே உள்ளது போன்ற செய்தி வரும், இதில் Yes பட்டனை க்ளிக் செய்து பதிந்து கொள்ளலாம்.
பிறகு இந்த wizard இல் வருகின்ற recommended செட்டிங்க்ஸ்களை பின்பற்றுங்கள். உங்களுக்கு Online கணக்கு வேண்டும் எனில் மைக்ரோசாப்ட் தளத்தில் உருவாக்கி கொள்ளலாம். Send information about this computer to Microsoft Fix it center online என கேட்கும் பொழுது No தேர்வு செய்வது நல்லது. 


இனி Microsoft Fix it center இயங்கும் பொழுது உங்கள் கணினியில் உள்ள பிரச்சனைகள் பட்டியலிடப்படும். இவற்றில் முழு விவரம் அறிய அதற்கு நேரான detail பட்டனை க்ளிக் செய்து பார்க்கலாம். 


தேவையான பிரச்சனையை சரி செய்ய run பொத்தானை க்ளிக் செய்து சரி செய்யலாம். தற்பொழுது இது பீட்டா வடிவில் வெளியிடப்பட்டுள்ளதால் உங்கள் கணினியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் என எதிர்பார்க்க கூடாது. பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்பலாம். 


நன்றி  அன்புதில் 

மத வியாபாரம்!


இஸ்லாத்தில் ஜோதிடம் இல்லை; அதே நேரத்தில் இஸ்லாமியர்களிடம் இந்த ஜோதிடம் எந்த அளவுக்கு இடம் பெற்றுள்ளது என்பதை நாம் அலசக் கடமைப்பட்டுள்ளோம். 
    இந்திய முஸ்லிம்களிடம் ஜோதிடம் சாதரணமாகப் புழக்கத்தில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதிலும் 50 சதவிகிதம் பேர் இஸ்லாமிய ஜோதிடர்களிடம் மட்டுமே  செல்லக்கூடிய அளவுக்கு ஈமானிய பலம்(!)  உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், ஜோதிடத்திற்கு எதிரான குர்ஆன் ஆயத்துகளும், ஹதீதுகளும் மாற்று மதத்தாரிடம் ஜோதிடம் கேட்பதைத்தான் தடுக்கின்றன; நம்ம மார்க்க மேதைகளான ஆலிம்களிடம் ஜோதிடம் பார்ப்பதை அல்ல என்றே நம்புகிறார்கள். அதாவது, நம்ம கையைக் கொண்டே நம் கண்ணைத் தோண்டினால் வலிக்காது என்ற மூட நம்பிக்கை.
    அவர்களைச் சொல்லி குற்றமில்லை. காலங்காலமாய் மக்களுக்கு மார்க்கத்தில் இருந்த அறியாமையைப் பயன்படுத்தி, தங்களின் பிழைப்புக்காக அவர்களிடம் மூடநம்பிக்கைத் தீயை அணையவிடாமல் நெய்யூற்றிவரும் இந்தச் சமுதாயத்தின் ஒரு சில ஆலிம்கள் தான் இங்கே குற்றவாளிகள்.
    நம்ம மக்களுக்கு அரபியில் இருப்பதெல்லாம் வேத வாக்கு. அரபி பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்கள் என்ற  நம்பிக்கை. அபூஜஹிலுக்கும், அபூலஹபுக்கும்  தெரியாத அரபியா? இன்று இஸ்லாத்தை கருவறுக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்ற யூதர்களுக்கெல்லாம் நம்ம ஆலிம்களைவிட இலக்கணச் சுத்தமாக அரபி தெரியும். அவர்களெல்லாம் அல்லாஹ்வின் நேசர்களா என்பதைச் சிந்தித்து பார்க்கவேண்டும்.
    இந்த தவறான நம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்டு ‘பால்கிதாபு’ என்கிற ஜோதிட புத்தகத்தை அரபிதமிழ் என்ற பாசையில் எழுதிவைத்துள்ளனர். உதாரணமாக ‘அவன்’ என்ற வார்த்தையை அலிஃப், வாவ், நூன் என்று எழுதுவது. இதுதான் பால்கிதாபு. நியுமராலஜி என்கின்ற எண் கணித சாஸ்திரமே இது. நம்ம பேரு, அத்தா பேரு, அம்மா பேரு எல்லாருடைய பேரையும் எழுதி கூட்டிவரக்கூடிய நம்பருக்கு ஜோதிடம் சொல்வது. இவை அரபியில் இருப்பதாலும், பார்ப்பவரும் ஏழு வருடம் மதரஸாவில் ஓதி ஸனது பெற்ற ஆலிமாக இருப்பதாலும் இந்த ஜோதிடம் ஹலாலான விஷயம்தான் என்று நம்மவர்கள் நம்பி விடுகிறார்கள்.
    அல்லாஹ் விதித்த விதியை அவன் மறைவாய் வைத்திருக்கும் போது அதைக் கணித்துச் சொல்கிறேன் என்று  சொல்பவர் யாராக இருந்தாலும், அவர் அல்லாஹ்வுக்கு நிகராகத் தன்னைப் பிரகடனப் படுத்திவிட்டார் என்றே அர்த்தம். அவரிடம் சென்று தங்கள் காரியங்களுக்கெல்லாம் நல்ல நாள் பார்ப்பது உள்ளிட்ட எல்லாமே ஷிர்க் (இணைவத்தல்) என்பதை உணரவேண்டும்.
    இது போன்ற ஆலிம்கள் ஜோதிடம் பார்ப்பதையும், மந்திரவாதம் பார்ப்பதையும் தொழிலாகக் கொண்டுள்ளார்கள். இந்த ஆலிம்களிடம் சென்று மறுமைக்கான பாவத்தைச் சேர்ப்பது ஒருபக்கம் இருக்க, இம்மையில் ஏற்படும் நஷ்டமோ சொல்லிமாளாது. இவர்களிடம் நோயென்று போனால் எந்த நோயையுமே நோயென்று பார்ப்பதில்லை. ஒன்று பேயென்று சொல்வார்கள்;  அல்லது செய்வினை என்று சொல்வார்கள். அதற்கு பரிகாரம் என்ற பெயரில் பெரிய லிஸ்ட் போட்டு பணத்தை கறப்பார்கள். அதையெல்லாம் சிறமேற்கொண்டு செய்தும் நோய் தீராமல் ஊரிலே இருக்கின்ற அத்தனை டாக்டர்களிடமும் போய் மாத்திரை வாங்கித் தின்பார்கள். என்னய்யா இப்படி? என்று கேட்டால் “பேய்க்கும் பார்க்கணும், நோய்ய்க்கும் பார்க்கணும்னு சொல்லியிருக்காங்கள்ள” என்பார்கள்.
    நபிமார்களின் வரிசுகளாகிய ஆளிம்களே, ஆலிம்களை உருவாக்கும் மதரஸா முதல்வர்களே, பேராசிரியர்களே, இதுபோன்ற ஜோதிட ஆலிம்சாக்களைப் போலிகள் என்று இனம் காட்ட முன்வாருங்கள்.  முன்வருவார்களா?
அபூ ஆஷிக்  சிந்தனை சரம்

11/01/2012


ஹதீஸ்களைத் தேடிச்சென்ற நபித்தோழர்கள்

Post image for ஹதீஸ்களைத் தேடிச்சென்ற நபித்தோழர்கள்

இஸ்லாத்தின் முதல் இரு கலீபாக்களான அபுபக்ரு(ரழி), உமர்(ரழி) இருவரின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் நபிவழிகளைத் தங்கள் நெஞ்சங்களில் பாதுகாத்து வைத்திருந்தனர். அக்காலத்தில் நபிமொழிகள் பல பாகங்கலிலும் பரவாமலேயே இருந்தன. காரணம், மிக மிக்கியமான நபித்தோழர்களைத் தவிர மற்ற நபித்தோழர்களை மதினாவின் வெளியே செல்வதை உமர்(ரழி) அவர்கள் தடை செய்திருந்தனர்.

10/30/2012



ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் கையில் தடியை ஏந்தியவர்களாக எங்களிடம் வந்தனர். அப்பொழுது நாங்கள் அவர்களுக்(கு மரியாதை செய்வதற்)காக எழுந்துவிட்டோம். அதற்கு அவர்கள் ‘அரபியல்லாதவர்களில் சிலர், சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எழுந்துவிடுவது போன்று நீங்கள் எழுந்து விடாதீர்கள்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அபூதாவூத்
நபி அவர்களைவிட (அவர்களின்) தோழர்களுக்கு எவரும் மிகவும் உவப்பானவராக இருக்கவில்லை. எனினும் நபி அவர்களை அவர்கள் பார்ப்பின் எழுந்திவிட மாட்டார்கள். காரணம் இதை நபி அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதைத் தோழர்கள் அறிந்திருந்ததால்தான். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) திர்மிதீ

10/27/2012


புகைப்பழக்கம்

Post image for புகைப்பழக்கம்

நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.

10/26/2012


திருமணத்தில் தீய பழக்கங்கள்

Post image for திருமணத்தில் தீய பழக்கங்கள்
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.
ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் மாறி மாறி போட்டோ எடுப்பதும் ஆடல் பாடல் என்று கும்மாளமிடுவதும் சர்வசாதாரணமாக பல திருமணங்களில் காணலாம். இங்கேயும் எந்த பாகுபாடுமின்றி மஹ்ரம் பேணப்படுவது கிடையாது. வருகிறவர் போகிறவர் நண்பர்கள் அனைவரும் மணமக்களை பார்த்து ரசிப்பது பெரும் வேதனைக்குரிய செயலாகும். தனது மனைவியின் அழகை தான் மட்டும் ரசிக்காமல் ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களும் முஸ்லிமான ஆண்களா?
மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்” வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்-
திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும்  மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும்   பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும்   ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும்   எங்கே போய்க் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்?
சமுதாயம் சீர் பெற   இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பெருமைக்காகவும்   ஆடம்பரத்துக்காகவும்   செய்யும் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஏழ்மையான மக்களின் சிரமங்களைக் குறைக்க முடியும்.
‘குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.” என்பது நபி மொழி. (அறிவிப்பவர். ஆயிஷா (ரலி) ஆதாரம் அஹ்மத்)
வரதட்சனை என்னும் வன்கொடுமை ஒழிய வேண்டும். சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் பாதகர்கள் திருந்த வேண்டும்.
கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.
வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை என்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத் தயாராகி விட்டனர்.
என்றாலும் இது ஒரு சாதனை அல்ல. மணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டம்.
சிலர் மஹர் என்னும் பெயரில் சொற்பத் தொகையை நிர்ணயித்து அதையும் கொடுக்காமல்   பள்ளிவாசலின் பதிவுப் புத்தகத்தில் பெயரளவில் எழுதி வைத்து விட்டு   கட்டிய மனைவியிடம் கடன்காரனாகக் காலத்தைக் கழிக்கிறார்கள்.
மஹர் தொகையைக் கொடுக்காமல் கடன் காரனாக இருப்பவர்கள் இப்போதாவது கொடுத்து விட வேண்டும். மஹர் தொகையை இப்போது கொடுப்பதால் ‘தலாக்” ஆகி விடும் என்று சிலர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கை. அறியாமல் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.
இவ்வளவு அனாச்சாரங்கள் அரங்கேரும் போதும் உலமாக்கள் என்று சொல்லுபவர்கள் உக்கார்ந்து மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள் என்றால் இதுதான் இஸ்லாத்தை போதிக்கின்ற முறையா? திருமணத்தை எதிர்நோக்குகின்ற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனது திருமணம் ஆடம்பரமில்லாமல் சுன்னாஹ்வின் வழியில் நடைபெற உதவிபுரிய வேண்டும். ஊர் வழமை, சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் வழிகாட்டிய திருமணத்தை, எளிய திருமணத்தை நடத்திக்காட்டி சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
FacebookBlogger PostEmailPrintFriendlyShare